சேலத்தில் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி.!

Published by
murugan
  • சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக் கழகத்தில் கடந்த 11-ம் தேதி நிவேதா என்ற மாணவி மின் விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
  • மாணவியின் அறையில் இருந்து டைரி, 3 பக்க காதல் கடிதம் மற்றும் செல்போன் கிடைத்து உள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் திருமலை. இவரது  மகள் நிவேதா (23) ,இவர் சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக் கழகத்தில் தாவரவியல் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நிவேதா அங்கு உள்ள விடுதியில் தங்கி இருந்து படித்து வந்தார்.

கடந்த 11-ம் தேதி மின் விசிறியில் தூக்கு மாட்டி நிவேதா தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில் , நிவேதா கடந்த 10-ந் தேதி அன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.

ஆனால் 11-ம் தேதி இரவு 7 மணிக்கு தான் மாணவிகள் காப்பாளருக்கு  தகவல் கொடுத்துஉள்ளனர். விடுதியில் நிவேதாவுடன் தங்கி இருந்த மாணவிகள் ஆய்வறிக்கை தயாரிப்பதற்காக களஆய்வுக்கு சென்று விட்டனர்.இந்நிலையில் நிவேதா மட்டும் விடுதியில்  இருந்துள்ளார்.

மாணவியின் அறையில் இருந்து டைரி, 3 பக்க காதல் கடிதம் மற்றும் செல்போன் கிடைத்து உள்ளது. மாணவி ஒருதலையாக ஒரு வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த வாலிபர் இவரின் காதலுக்கு மறுப்பு தெரிவித்து உள்ளார். இதனால் மனமுடைந்த நிவேதா விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மேலும் மாணவியின் செல்போனில் உள்ள எண்களை வைத்து விசாரணை நடத்த உள்ளோம். விசாரணை முடிந்தால் தான் தற்கொலைக்கான முழுமையான காரணம் தெரியும் என கூறினார்.

Published by
murugan

Recent Posts

ரயில்வே துறை அறிவித்த ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்!

ரயில்வே துறை அறிவித்த ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்!

டெல்லி : இந்திய ரயில்வே அமைச்சகம், நாடு முழுவதும் ரயில் கட்டண உயர்வு 2025 ஜூலை 1 (இன்று) முதல்…

21 minutes ago

திருப்புவனம் இளைஞர் மரணம் : “தப்ப முயன்றபோது வலிப்பு”… FIR-ல் அதிர்ச்சி தகவல்!

சிவகங்கை :  மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…

38 minutes ago

நாளை முதல் Swiggy – Zomato ஆர்டர் கிடையாது? ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.!

சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…

10 hours ago

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்தார் மொயீன் அலி.!

இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…

10 hours ago

ஓடுபாதையில் கோளாறு.., பெங்களூரு புறப்பட்ட புதுச்சேரி இண்டிகோ விமானம் ரத்து.!

புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…

11 hours ago

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…

12 hours ago