திமுகவின் பொய்யில் இருந்து எப்பொழுது எங்களுக்கு ‘விடியல்’ அரசே? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி ரூ.5 மற்றும் ரூ.10 குறைக்கப்படும் என்று மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.அதன்படி, இந்த விலை குறைப்பானது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து,கர்நாடக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை 7 ரூபாய் குறைத்திருப்பதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்தார்.அதேபோல,பல பகுதிகளிலும் விலை குறைக்கப்பட்டுள்ளது.இதனால்,டீசல் விலை மீண்டும் 100 ரூபாய்க்கு கீழ் குறைந்தது.பெட்ரோல், டீசல் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில்,இந்த விலை குறைப்பு வாகன ஓட்டிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில்,பிரதமர் நரேந்திர மோடி அரசு பெட்ரோலுக்கு ரூ.5, டீசலுக்கு ரூ.10 குறைத்திருக்கிறார்கள்.ஆனால், உங்களுடைய பொய்யில் இருந்து எப்பொழுது எங்களுக்கு ‘விடியல்’ அரசே?, என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்ததும்,பெட்ரோலின் விலையை ரூ.5, டீசலின் விலையை ரூ. 4 விதம் குறைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார்கள்.இந்த நிலையில்,பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடைய அரசு பெட்ரோலுக்கு ரூ.5, டீசலுக்கு ரூ.10 குறைத்திருக்கிறார்கள்.ஆனால், உங்களுடைய பொய்யில் இருந்து எப்பொழுது எங்களுக்கு ‘விடியல்’ அரசே?”,என்று குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…