25 லட்சம் கோடிகள் கொள்ளை அடித்துள்ள ஒன்றிய மோடி அரசு எப்போது விலையைக் குறைக்கும்? – எம்பி ஜோதிமணி

Published by
பாலா கலியமூர்த்தி

பெட்ரோல் ,டீசலில் 25 லட்சம் கோடிகள் கொள்ளை அடித்துள்ள ஒன்றிய மோடி அரசு எப்போது விலையைக் குறைக்கும்? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ட்வீட்.

காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது ட்விட்ர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார், அதில், விவசாயிகள் விரோத நரேந்திர மோடியின் ஆட்சியில் கொடும் துயரை அனுபவித்து வரும் விவசாயிகளுக்கு சிறப்பான வேளாண் நிதிநிலை அறிக்கையை வழங்கி, தனது 100 நாட்களை நிறைவு செய்யும் தமிழக அரசுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

வேளாண் நிதிநிலை அறிக்கையில், எனது கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் முருங்கை ஏற்றுமதி மண்டலங்கள், கரூரில் உழவர் சந்தை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின், அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.

வேளாண் துறைக்கு கடந்த ஆட்சியை விட மூன்று மடங்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.11,894.48 கோடியிலிருந்து ரூ.34,220.65 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது வேளாண் துறைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை காட்டுகிறது. சிறப்பான வேளாண் நிதிநிலை அறிக்கைக்கு பாராட்டுகள்.

மேலும், கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையிலும் தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிப்படி 3 ரூபாய் பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது. பெட்ரோல், டீசலில் 25 லட்சம் கோடிகள் கொள்ளை அடித்துள்ள ஒன்றிய மோடி அரசு எப்போது விலையைக் குறைக்கும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

15 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

16 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago