தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தில் 1 முதல் 8-ஆம் வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து செப்டம்பர் 8-ஆம் தேதிக்கு பின் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
பள்ளிகள் திறப்பது குறித்து 8-ஆம் தேதிக்கு பிறகு முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கு வரும் மாணவர்களின் பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார். இதனிடையே, தமிழகத்தில் கடந்த 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டு, நடைபெற்று வருகிறது.
மேலும், உயர் வகுப்புகள் செயல்படுவதை கவனித்து அதன் அடிப்படையில், மழலையர் வகுப்புகள் மற்றும் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளை 15ஆம் தேதிக்கு பிறகு திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் என்று ஊரடங்கு அறிவிப்பின் போது தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…