போலி இ-பாஸ் பயன்படுத்தி பயணித்தால் கிரிமினல் வழக்கு.! எச்சரித்த கூடுதல் காவல் ஆணையர்.!

Published by
மணிகண்டன்

போலி இ-பாஸ் பயன்படுத்தி பயணிப்போர் மீது கிரிமினல் வழக்கு பதியப்படும். – சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் காவல்  ஆணையர் கண்ணன் எச்சரிக்கை.!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு இம்மாத இறுதி வரையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில், மாவட்டம் விட்டு மாவட்டம்  செல்ல இ-பாஸ் கட்டாயம் என உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் காவல்  ஆணையர் கண்ணன், ஆட்டோ ஓட்டுனர்கள், கால்டாக்சி ஓட்டுனர்கள், லாரி ஓட்டுனர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த கூட்டத்திற்கு பிறகு அவர் பேசுகையில், பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் முன்னெடுத்து வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என கூறினார்.

மேலும், போலி இ-பாஸ்  பயன்படுத்தி பயணிப்போர் மீது கிரிமினல் வழக்கு பதியப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஊரடங்கை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நாளை முதல் திருப்பி தரப்படும் எனவும் கூறினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

6-ம் தேதி மழை இருக்கு.! எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

6-ம் தேதி மழை இருக்கு.! எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

16 minutes ago

கள்ளழகர் திருவிழா: ”இதை செய்யவே கூடாது” கோவில் நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகள்.!

மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…

50 minutes ago

களத்தில் இறங்கிய இந்திய விமானப்படை! உ.பி அதிவிரைவு சாலையில் தீவிர பயிற்சி!

லக்னோ : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய முப்படைகளும் தயார்நிலையில் இருக்க பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு…

60 minutes ago

”பலரின் தூக்கத்தை கலைக்கும் காட்சி இது” – கேரள விழிஞ்சம் துறைமுகம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி.!

திருவனந்தபும் : கேரளாவில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரள…

1 hour ago

கங்குவா வசூலை பீட் செய்ததா ‘ரெட்ரோ’.? முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் ரிலீசாகியுள்ள 'சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த 'ரெட்ரோ' திரைப்படம் நேற்று (மே 1)…

2 hours ago

இரட்டைக் கொலை., திமுக ஆட்சியின் லட்சணமா? இபிஎஸ் கடும் கண்டனம்!

சென்னை : ஈரோடு மாவட்டம் சிவகிரி விலாங்காட்டு வலசை பகுதியை சேர்ந்த ராமசாமி - பாக்கியம் தம்பதி அவர்களின் பண்ணை…

2 hours ago