DGP TN [Image-ABPnadu]
தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி தேர்வு செய்யும் ஆலோசனைக்கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.
தமிழகத்தின் காவல்துறையின் தலைமை இயக்குனர் பொறுப்பில் இருக்கும் டிஜிபி சைலேந்திர பாபு வரும் 30 ஆம் தேதி பணிநிறைவு பெற இருக்கிறார். இந்த நிலையில் தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார் என்ற ஆர்வம் அதிகரித்து வருகிறது.
புதிய டிஜிபியை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தநிலையில் அதற்கான இறுதிக்கட்ட ஆலோசனை இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இன்று டெல்லியில் நடைபெறும் ஆலோசனைக்கூட்டத்தின் முடிவில் தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார் என்பது உறுதியாகிவிடும்.
இதற்கான பட்டியலில் பரிந்துரைக்கப்ட்டவர்கள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த டெல்லியில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…