அரசியலில் ரஜினியை போல் தான் சசிகலாவும் என்று எச் ராஜா செய்தியாளர்கள் பேட்டியின் போது தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எச் ராஜா, அரசியல் ரீதியாக நான் இந்த நிலைப்பாட்டை எடுக்கவுள்ளேன் என்று சசிகலா அவர்களே சொல்லாத போது, அவர் வாய் திறந்து இதுவரை பேசாத போதும், நீங்கெல்லாம் ஏன் ரொம்ப கவலைப்படுறீங்க என்று கூறியுள்ளார். இப்படித்தான் ரஜினிகாந்த், ரஜினிகாந்த் என்று அனைவரும் கூறிக் கொண்டே இருந்திங்க, கடைசில் அவர் என்ன சொன்னார். நான் அரசியலுக்கு வரவில்லை என்று தெரிவித்தார்.
பின்னர் எதுக்கு நீங்களும் நானும் இதுகுறித்து தேவையில்லாமல் விவாதிக்க வேண்டும் என்று செய்தியாளர்களை பார்த்து தெரிவித்துள்ளார். முதலில் சசிகலா அவர்களுடைய நிலைப்பாட்டை அறிவிக்கட்டும். பின்னர் அவர்களின் நிலைப்பாட்டை பொறுத்தே எதிர்கால அரசியல் அமையும் என குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…