ராதிகா சரத்குமார் அவர்கள் பேசுகையில், ஏன் சரத்குமார் முதலமைச்சராக கூடாதா? அந்த திறமை அவருக்கு இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் தஞ்சை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் சரத்குமார் மற்றும் மகளிர் அணி செயலாளர் ராதிகா சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து கூட்டத்தில் ராதிகா சரத்குமார் அவர்கள் பேசுகையில், ஏன் சரத்குமார் முதலமைச்சராக கூடாதா? அந்த திறமை அவருக்கு இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சரத்குமார், முதலமைச்சர் ஆவதற்கு என்ன தகுதி வேண்டும். எனக்கு பிரதமராக கூடிய தகுதி இருக்கிறது. தாடி கூட வைத்துள்ளேன் என்று நக்கலாக தெரிவித்தார். ஒரு சீட்டு இரண்டு சீட்டுகள் கூட்டணி வைக்க விரும்பவில்லை என்றும், தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்தியாளர்கள் அவரிடம் விவசாயிகள் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சரத்குமார் மக்களுக்காக தான் சட்டங்கள் இருக்க வேண்டும். அவர்கள் வைக்கும் சில கோரிக்கைகளை மறுபரிசீலனை செய்வது என்பது தவறு இல்லை என்றும், சட்டத்திலுள்ள பயன்களை எடுத்து விபரமாக விவசாயிகளுக்கு சொல்ல முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…