ராதிகா சரத்குமார் அவர்கள் பேசுகையில், ஏன் சரத்குமார் முதலமைச்சராக கூடாதா? அந்த திறமை அவருக்கு இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் தஞ்சை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் சரத்குமார் மற்றும் மகளிர் அணி செயலாளர் ராதிகா சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து கூட்டத்தில் ராதிகா சரத்குமார் அவர்கள் பேசுகையில், ஏன் சரத்குமார் முதலமைச்சராக கூடாதா? அந்த திறமை அவருக்கு இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சரத்குமார், முதலமைச்சர் ஆவதற்கு என்ன தகுதி வேண்டும். எனக்கு பிரதமராக கூடிய தகுதி இருக்கிறது. தாடி கூட வைத்துள்ளேன் என்று நக்கலாக தெரிவித்தார். ஒரு சீட்டு இரண்டு சீட்டுகள் கூட்டணி வைக்க விரும்பவில்லை என்றும், தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்தியாளர்கள் அவரிடம் விவசாயிகள் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சரத்குமார் மக்களுக்காக தான் சட்டங்கள் இருக்க வேண்டும். அவர்கள் வைக்கும் சில கோரிக்கைகளை மறுபரிசீலனை செய்வது என்பது தவறு இல்லை என்றும், சட்டத்திலுள்ள பயன்களை எடுத்து விபரமாக விவசாயிகளுக்கு சொல்ல முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…
மலேசியா : தாய்லாந்து - கம்போடியா ஆகிய இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக மலேசிய பிரதமர்…
டெல்லி : பஹல்காமில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர்…