சட்டப் பேரவையிலிருந்து வெளிநடப்பு ஏன் ? – ஈபிஎஸ் விளக்கம்

Published by
பாலா கலியமூர்த்தி

சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பில் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு ஏன் ? என ஈபிஎஸ் விளக்கம்.

தமிழக சட்டப்பேரவையில் 2022-23-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. இன்று நிதித்துறை கோரிக்கைகளுக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்து வருகிறார். அப்போது, சட்டம், ஒழுங்கு பிரச்சினை குறித்து பேச அதிமுக அனுமதி கோரியது. அனுமதி மறுக்கப்பட்டதால் சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர்வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையிலிருந்து இன்று நிதியமைச்சர் அவர்களது பதிலுரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தது ஏன் என்று செய்தியாளர்களிடம் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, நேற்று எதிர்கட்சித்துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் நிதிநிலை அறிக்கை மீது தெளிவாகவும், விரிவாகவும் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார்.

சுட்டிக்காட்டிய குறைகளை தாங்கமுடியாத, பொறுத்துக்கொள்ள அவர் முடியாத இந்த அரசின் நிதியமைச்சர், எதிர்கட்சித் துணைத்தலைவர் பேசிக்கொண்டிருக்கும்போதே அவையிலிருந்து வெளியேறினார். மேலும் அவர் வெளியேறும்போது கையிலிருந்த காகிதங்களை வீசிவிட்டுச் சென்றார். அனுபவம் வாய்ந்தவர்களின் கருத்தை நிதியமைச்சர் ஏற்க மறுக்கிறார்.

பிரதான எதிர்கட்சியை அவமதிக்கும் வகையில் நிதியமைச்சர் நடந்துகொண்டதை சட்டப்பேரவையில் விளக்கிக்கூற முற்பட்டோம். அதற்கு பேரவைத் தலைவர் அனுமதி அளிக்காததால் வெளிநடப்பு செய்தோம். எங்களின் வெளிநடப்பை கொச்சைப் படுத்தும் வகையில் பேரவைத் தலைவர் நொண்டிச் சாக்குக் கூறி வெளிநடப்புச் செய்ததாக விமர்ச்சித்தது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது என தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்! 

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

42 minutes ago

6-ம் தேதி மழை இருக்கு.! எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

58 minutes ago

கள்ளழகர் திருவிழா: ”இதை செய்யவே கூடாது” கோவில் நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகள்.!

மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…

2 hours ago

களத்தில் இறங்கிய இந்திய விமானப்படை! உ.பி அதிவிரைவு சாலையில் தீவிர பயிற்சி!

லக்னோ : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய முப்படைகளும் தயார்நிலையில் இருக்க பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு…

2 hours ago

”பலரின் தூக்கத்தை கலைக்கும் காட்சி இது” – கேரள விழிஞ்சம் துறைமுகம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி.!

திருவனந்தபும் : கேரளாவில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரள…

2 hours ago

கங்குவா வசூலை பீட் செய்ததா ‘ரெட்ரோ’.? முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் ரிலீசாகியுள்ள 'சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த 'ரெட்ரோ' திரைப்படம் நேற்று (மே 1)…

2 hours ago