திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதியை சேர்ந்த வையம்பட்டி அருகே உள்ள வத்தமணியாபுரம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன்.இவர் கல் உடைக்கும் தொழில் செய்து வந்துள்ளார்.
இவரது மனைவி பஞ்சவர்ணம்.இவருக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளன.இந்நிலையில் இவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியையும் பிள்ளைகளையும் அடித்து கொடுமை படுத்தியுள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு முருகேசன் குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.மேலும் வாக்குவாதம் விரிவடைந்து பெரிய மோதலாக மாற ஆத்திரம் அடைந்த மனைவி பஞ்சவர்ணம் ஊதுகுழலை வைத்து கணவனின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் மயங்கியபடி கீழே விழுந்துள்ளார் முருகேசன்.உடனே பஞ்சவர்ணம் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் முருகேசனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இந்நிலையில் இந்த சம்பவம் காரணமாக காவல்துறையினருக்கு தகவல் கிடைக்க ,அவர்கள் வருவதற்குள் பஞ்சவர்ணம் தலைமறைவாகியுள்ளார்.
இதன் அடிப்படையில் காவல்துறையினர் தப்பி சென்ற மனைவியை வலை வீசி தேடிவருக்கின்றனர்.மேலும் மனைவியே கணவனை கொன்ற சம்பவம் அப்பகுதியினிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…