தேமுதிகவின் வேட்பாளர் பட்டியல் நாளை மறுநாள் வெளியாவதாக அக்கட்சியின் துணைச் செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின் தாங்கள் கேட்ட தொகுதி கிடைக்காத காரணத்தினால் கூட்டணியில் இருந்து விலகியது. அதனைதொடர்ந்து அமமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதனை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உறுதிப்படுத்தினார்.
அதுகுறித்து அவர் கூறுகையில், எப்போது வேண்டுமானாலும் கூட்டணி இறுதி செய்யப்படலாம் என தெரிவித்தார். இதனால் விரைவில் அமமுக- தேமுதிகவுடன் கூட்டணி உறுதியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த பேச்சுவார்த்தையை நிறுத்தியது. இதனால் தனித்து போட்டியிடுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், தற்பொழுது அமமுக அதன் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
இதில் 200-க்கும் அதிகமான தொகுதிகளுக்குகாண வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதால், தேமுதிக தனித்து போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தேமுதிகவின் வேட்பாளர் பட்டியல் நாளை மறுநாள் வெளியாவதாக அக்கட்சியின் துணைச் செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனால் தேமுதிகவின் அடுத்தகட்ட நகர்வு குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…