தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுமா..? இன்று முடிவு..!

Published by
murugan

தலைமை செயலாளர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் வழக்கமாக +2 பொதுத்தேர்வு மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதத்தில் முடியும். ஆனால் கொரோனா காரணமாக இந்த ஆண்டு +2 பொதுத்தேர்வு மே மாதத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால், மே 3-ஆம் தேதி முதல் தேர்வு தொடங்கும் என கூறப்பட்டது.

இதற்கிடையில் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெற உள்ளதால் மே 3-ஆம் தேதி நடக்க இருந்த  மொழிப்பாடத் தேர்வை மட்டும் ஒத்தி வைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதன்காரணமாக மே 5-ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்க இருக்கிறது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் இதுவரை இல்லாத அளவிற்கு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், மே 5-ஆம் தேதி தமிழகத்தில் 12-ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. இந்நிலையில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா மத்தியில் பொதுத் தேர்வு திட்டமிட்டபடி நடத்தப்படுமா.? அல்லது ஒத்திவைக்கலாமா என்பது பற்றி முடிவு செய்ய தலைமை செயலாளர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்திற்குப் பிறகு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுமா அல்லது நடைபெறுமா என்பது தெரியவரும். நேற்று மத்திய அரசு சிபிஎஸ்இ 10-ஆம் பொதுத் தேர்வை ரத்து செய்தும்,  12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைத்து உத்தரவை பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan
Tags: #PublicExam

Recent Posts

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

12 hours ago

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

13 hours ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

13 hours ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

14 hours ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

14 hours ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

15 hours ago