தமிழகத்தில் ரூ.56,229.54 கோடி முதலீட்டில் 1,74,999 பேருக்கு வேலை வாய்ப்பு -தமிழக அரசு..!

Published by
murugan

தமிழகத்தில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 109 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளதாக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையொப்பமிட்டு வருகிறது. இந்தாண்டில் இதுநாள் வரை 109 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளதாகவும், புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் உறுதி செய்யப்பட்ட முதலீடு ரூ.56,229.54 கோடி எனவும், 1.74 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வருடம், அதாவது 2021-22, இன்றைய நாள் வரை 109 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளது. இவற்றில் உறுதி செய்யப்பட்ட முதலீடு 56.229.54 கோடி ரூபாய் மற்றும் வேலைவாய்ப்பு 1,74,999 நபர்கள் ஆகும்.

இந்த முதலீடுகள் எரிசக்தி நிலையங்கள், மின்னணுவியல், மோட்டார் வாகன உதிரி பாகங்கள், தொழிற் பூங்காக்கள் வர்த்தகக் கிடங்கு மையங்கள், வான்வெளி மற்றும் பாதுகாப்பு, தகவல் தொழில் நுட்பம் / தகவல் தொழில் நுட்பச் சேவைகள், பொது உற்பத்தி, சிமெண்ட் உற்பத்தி, உணவுப் பதப்படுத்துதல், காலணிகள், மருந்துப் பொருட்கள், ஜவுளி போன்ற பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சமச்சீரான வளர்ச்சியை உறுதி செய்திடும் வகையில், இந்த முதலீடுகள், மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் பரவலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

GO

Published by
murugan
Tags: #TNGovt

Recent Posts

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

15 minutes ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

35 minutes ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

1 hour ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

2 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

2 hours ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

3 hours ago