+2 துணை தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! கடைசி தேதி இதுதான் மாணவர்களே..
தனி தேர்வர்கள் அரசு தேர்வுகள் இயக்கக சேவை மையங்களிலும் இன்று முதல் மே 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும் வகையில் மறுதேர்வுக்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது? எந்த தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப காலம்: துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மாணவிகள் மே 14, 2025 முதல் மே 31, 2025 வரை மட்டுமே விண்ணப்பம் செய்துகொள்ள முடியும். எனவே, இந்த காலக்கெடுவிற்குள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
- +2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளிகள் வாயிலாக துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். பள்ளிகள் மாணவர்களின் விண்ணப்பங்களை சேகரித்து, அரசு தேர்வுகள் இயக்ககத்திற்கு அனுப்பி வைக்கும்.
தனித்தேர்வர்கள்:
- தனித்தேர்வர்கள் தங்கள் விண்ணப்பங்களை அரசு தேர்வுகள் இயக்ககத்தின் சேவை மையங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்காக அரசு தேர்வுகள் இயக்ககம் மாவட்ட வாரியாக சேவை மையங்களை அமைத்துள்ளது.
துணைத் தேர்வு நடைபெறும் தேதி:
- துணைத் தேர்வுகள் ஜூன் 25, 2025 முதல் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.தேர்வு அட்டவணை மற்றும் பிற விவரங்கள் பின்னர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
- +2 பொதுத் தேர்வு மதிப்பெண் பட்டியல் (மதிப்பெண் பட்டியலை மே 12, 2025 முதல் அரசு தேர்வுத் துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்). பள்ளி அடையாள அட்டை அல்லது பிற அடையாளச் சான்று. தேர்வு கட்டணம் செலுத்தியதற்கான ரசீது (கட்டண விவரங்கள் பள்ளி மூலம் தெரிவிக்கப்படும்).
தனித்தேர்வர்கள்:
- முந்தைய தேர்வு மதிப்பெண் பட்டியல் அல்லது தேர்வு எண் (Hall Ticket Number). அரசு தேர்வுகள் இயக்ககத்தால் குறிப்பிடப்பட்ட பிற ஆவணங்கள் (அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்) தனித்தேர்வர்கள் அரசு தேர்வுகள் இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.dge.tn.gov.in இல் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, சேவை மையங்களில் சமர்ப்பிக்கலாம்.