வாய்ப்பை இப்படி தான் பயன்படுத்தனும்! இரட்டை சதம் விளாசி சொல்லிக்கொடுத்த கருண் நாயர்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 204 ரன்கள் குவித்து இந்திய வீரர் கருண் நாயர் அசத்தியுள்ளார்.

கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாகி விளையாடி அசத்தியுள்ளார். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய A அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று கேன்டர்பரி செயிண்ட் லாரன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அதிரடியாக முதல் இன்னிங்சில் அசத்தியுள்ளது. இதுவரை அதாவது உணவு இடைவெளிக்கு முன்புவரை 119 ஓவர்கள் விளையாடிய இந்திய அணி 533 ரன்கள் குவித்துள்ளது.
இந்த அளவுக்கு இந்தியா அதிரடியான ரன்களை குவித்த காரணமே இந்திய வீரர் கருண் நாயரின் அதிரடி ஆட்டம் தான் காரணம். ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய கருண் நாயருக்கு இந்த டெஸ்ட் தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை கனகச்சிதமாக பயன்படுத்திய கருண் நாயர் நிதானம் கலந்த அதிரடியுடன் இந்த போட்டியில் விளையாடினார் என்று தான் சொல்லவேண்டும்.
இந்த போட்டியில் அவர் முதலில் சதம் விளாசியபோதே சமூக வலைத்தளங்களில் அவருக்கு பாராட்டுக்கள் குவிய தொடங்கிவிட்டது. பலரும் அப்போத இளம் வீரர்கள் இவரை பார்த்து கிடைக்கும் வாய்ப்பை எப்படி சரியாக பயன்படுத்தவேண்டும் என்பதை கற்றுக்கொள்ளுங்கள் என கூறினார்கள். அதன்பிறகு அவரு இரட்டை சதம் விளாசிய பிறகு இன்னும் பாராட்டுக்கள் அதிகமாக தொடங்கிவிட்டது.
அவர் இரட்டை சதம் விளாசியபிறகு நிச்சயமாக கருண் நாயர் எல்லா வடிவங்களிலும் விளையாடக்கூடிய ஒரு சிறப்பான வீரர் என்பதை நிரூபித்துக்கொண்டு இருக்கிறார். எனவே, அவருக்கு இந்திய அணியில் சரியான இடத்தை கொடுத்து முக்கியமான போட்டிகளில் விளையாடும் வாய்ப்புகளை வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்திருக்கிறது.