தமிழ்நாடு-கேரளா எல்லையில் 2,660 வீடுகளில் ஜிகா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கொரோனா வைரஸ்களுக்கு அடுத்தப்படியாக ஜிகா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதுவரை அம்மாநிலத்தில் 15 பேருக்கு தொற்று உறுதியாக்கிருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு-கேரளா எல்லையில் பரிசோதனை அதிதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கொசுக்கள் மூலம் பரவும் வைரஸ் என்பதால் இந்த வைரசுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை வேகமாக எடுத்து வருகின்றனர். இது குறித்து தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியுள்ளதாவது,
தமிழக-கேரள எல்லையில் உள்ள 2,660 வீடுகளுக்கு ஜிகா வைரஸ் பரிசோதனை மேற்கொண்டதில் யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை. கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து வித பயணிகளுக்கும் சோதனை நடத்தப்படுகிறது. மேலும், பேருந்து, ரயில் மற்றும் லாரிகளில் வருபவர்களுக்கும் ஜிகா வைரஸ் பரிசோதனை நடத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…