Israel Palastine WAR - US THAAD [Image source : Reuters]
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தி , பதிலுக்கு இஸ்ரேல் , ஹமாஸ் அதிகம் இருக்கும் காசா பகுதியில் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது, இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு போர் தொடங்கி 16 நாட்களாக தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இதில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டு இருப்பது காஸாவில் இருக்கும் பாலஸ்தீன மக்கள் தான்.
இஸ்ரேல் – ஹமாஸ் தாக்குதலுக்கு, இஸ்ரேலுக்கு துணையாக அமெரிக்கா தொடர்ந்து ராணுவ உதவிகளை அளித்து வருகிறது . ஏற்கனவே, போர் விமானங்கள், ஆயுதங்கள் வழங்கிய அமெரிக்க தற்போது தாட் (THAAD) எனப்படும் ஏவுகணை தடுப்பு பாதுகாப்பு அமைப்பை அனுப்ப உள்ளது.
திறந்தது எகிப்து எல்லை! காசாவுக்கு ட்ரக் மூலம் வந்துசேர்ந்த நிவாரணப் பொருட்கள்…
இது ஒரு கவச அமைப்பு, இந்த THAAD மூலம், தொலைவில் இருந்து வரும் வீரியமிக்க, வேகமான ஏவுகணைகள் சுட்டு வீழ்த்த முடியும். ஏற்கனவே இதே போல அயன் டோம் எனும் ஆயுதம் அமெரிக்காவால் வழங்கப்பட்டு இருந்தாலும், இந்த THAAD அதிக வீரியம் கொண்ட ஏவுகணைகளையும் தாக்கும் திறன் கொண்டது.
ஹமாஸ் ஆரம்பித்தது முதலே இஸ்ரேலுக்கு பல்வேறு ராணுவ உதவிகளை செய்து வரும் அமெரிக்கா, ஏற்கனவே, மத்திய கிழக்கு பிராந்திய பகுதியில் போர் கப்பலை நிறுத்தியுள்ளது. இது போக, 2 ஆயிரம் ராணுவ வீரர்களை அமெரிக்கா அனுப்ப உள்ளதாகவும் தகவல்கள் கசின்றன.
முன்னதாக எகிப்தில் நடைபெற்று முடிந்த உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட அரபு நாட்டு தலைவர்கள் , இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் குறைந்தது 24 மணிநேரமாவது போரை நிறுத்த வேண்டும். ஹமாஸ் நகரில் பாலஸ்தீன மக்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க, அவர்களுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கைதி திரைப்படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து…
சென்னை : நேற்று ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று (28-05-2025) காலை 05.30…
ரஷ்யா : 2022 முதல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முயல்கிறது, இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது.…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், லக்னோ அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான…