ஜப்பான் நாட்டின் பாரம்பரியமிக்க தொழில் குழுமமான சுமிட்டோமோ குழுமத்திற்கு கீழ் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனம் இந்தியாவில் தனது வர்த்தகத்தை நிறுவ திட்டமிட்டுள்ள நிலையில், மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா என்ற தொழிற்பூங்காவிற்கு அருகிலுள்ள 3 ஏக்கர் நிலத்தை மிகப்பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளது.
மும்பை பாந்த்ரா குர்லா தொழிற்பூங்காவில், ஜியோ கார்டன் அருகே உள்ள 3 ஏக்கர் நிலத்தை ஏக்கர் ஒன்றுக்கு 745 கோடி ரூபாய் வீதம், 3 ஏக்கர் நிலத்தை, 2,238 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்க முன் வந்துள்ளது. இதனை மும்பை பெருநகர மேம்பாட்டு ஆணைய அதிகாரிகளும் பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது ஏற்கப்பட்டால், இதுவரை இந்தியாவில் இல்லாத அதிகபட்ச நில ஏல நடவடிக்கையாக இருக்கும். மேலும், மும்பை வடாலாவில் ஏக்கர் ஒன்று 653 கோடி ரூபாய் என்ற விலையில், 6.2 ஏக்கர் நிலத்தை 4 ஆயிரத்து 50 கோடிக்கு வாங்கியது தான் அதிகபட்ச தொகையில் எடுக்கப்பட்ட நில ஏலம் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…