Categories: உலகம்

133 பேரை பலிகொண்ட மாஸ்கோ தாக்குதல்… ஒப்புக்கொண்ட குற்றவாளிகள்.?

Published by
மணிகண்டன்

Moscow Attack : மாஸ்கோ தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோ நகரின் புறநகர் பகுதியில் கடந்த 21ஆம் தேதி இரவு நேரத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் சுமார் 5ஆயிரம் பேர் பங்கேற்றனர். அப்போது அங்கு புகுந்த மர்ம கும்பல் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் சுமார் 133 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த கொடூர தாக்குதலை நடத்தியதற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள், அவர்களுக்கு உதவியவர்கள் என அனைவரையும் பிடிப்பதற்கு ரஷ்ய பாதுகாப்புத்துறை தீவிரம் காட்டியது. இந்நிலையில் இந்த கொடூர சமபவத்தில் ஈடுபட்ட 4 பேரை முதற்கட்டமாக ரஷ்ய பாதுகாப்புத்துறை கைது செய்துள்ளது. மேலும் 10 பேர் விசாரணை வளையத்தில் பாதுகாப்புத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளனர்.

கைது செய்யப்பட்ட 32 வயதான டேலர்ட்ஜோன் மிர்சோயேவ், 30 வயதான சைதாக்ரமி ரச்சபலிசோடா, 19 வயதான முகமதுசோபிர் ஃபைசோவ், 25 வயதான ஷம்சுதீன் ஃபரிதுன் ஆகியோர் இன்று ரஷ்ய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் . அதில் , டேலர்ட்ஜோன் மிர்சோயேவ், சைதாக்ரமி ரச்சபலிசோடா ஆகியோர் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முகமதுசோபிர் ஃபைசோவ் விசாரணையின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் சர்க்கர நாற்காலியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். குற்றம் தொடர்பாக கைது செய்யப்ட்டவர்களிடம் கடுமையான முறையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என கூறபடுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

இனிமே ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை! அதிரடி உத்தரவு!

சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…

15 hours ago

ரூ.5.37 கோடி கொடுக்கவில்லை…மதராஸி படக்குழுவினர் மீது புகார் கொடுத்த நிறுவனம்!

சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…

16 hours ago

இபிஎஸ் அழுத்தத்தால் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படவில்லை …விளக்கம் கொடுத்த நயினார் நாகேந்திரன்!

சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…

17 hours ago

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…

18 hours ago

எதுக்கு குல்தீப் யாதவை எடுக்கவில்லை? டென்ஷனான கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…

19 hours ago

விஜய் சேதுபதிக்கு பிளாக் பஸ்டர்…ரூ.50 கோடி வசூல் செய்த “தலைவன் தலைவி”!

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…

20 hours ago