Categories: உலகம்

பட்டப்பகலில் உக்ரைன் குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்! 41 பேர் பலி…

Published by
கெளதம்

ரஷ்யா தாக்குதல் : உக்ரைன் தலைநகர் கீவில் குழந்தைகள் மருத்துவமனை உள்ளிட்ட 5 முக்கிய நகரங்களில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர், 170-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் 800 நாள்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. சொல்லப்போனால், கடந்த 2022 ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கிய இந்த தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்றைய தினம் பட்டப்பகலில் உக்ரைன் தலைவர் நகர் கீவ், டினிப்ரோ, கிர்வி ரிஹ், சுலோவன்ஸ்க், கர்மட்ரோஸ் உள்ளிட்ட 5 நகரங்களின் பல்வேறு பகுதிகள் மீது ரஷ்யா நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் கீவ் நகரத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது, நடந்த தாக்குதலில் 36 பேர் உயிரிழந்ததுடன் 171பேர் படுகாயமடைந்தனர் என்று அந்நாட்டு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் நடந்ததற்கு பிறகு, பயந்துபோன நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தங்கள் உயிரைக் காப்பாற்றி கொள்ள தப்பிச் சென்றனர். மேலும் இடிபாடுகளுக்கு அடியில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதல் நடத்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கண்ணை கலங்க வைக்கிறது.

இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சமூக வலைத்தளங்களில் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்துப் பதிவிட்டுள்ளார். “தலைநகர் கீவ், டினிப்ரோ, கிரிவி ரிஹ், உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் மீது 40-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. குறிப்பாக, குழந்தைகள் மருத்துவமனை, அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளிட்டவை கடுமையாக சேதமடைந்துள்ளது என்று கூறியுள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

மகன் வீடியோக்களை நீக்க சொல்லி மிரட்டல்? மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…

2 hours ago

தகவல்கள் திருட்டு? கூகுள் நிறுவனத்துக்கு 2,620 கோடி அபராதம் போட்ட அமெரிக்க நீதிமன்றம்!

கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக…

2 hours ago

பான் கார்டு விண்ணப்பம் செய்யணுமா? அப்போ ஆதார் கட்டாயம்…மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : மத்திய அரசு புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை 1, 2025 முதல் புதிய பான்…

3 hours ago

“1.6 கோடி மக்கள் அபாயத்தில் உள்ளனர்”..ட்ரம்ப் நிறைவேற்றிய Medicaid மசோதாவில் டென்ஷனா ஒபாமா!

வாஷிங்டன் :  அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க…

3 hours ago

அடிச்சா அடி இடிச்சா இடி…சதம் விளாசி சாதனைகளை படைத்த கேப்டன் கில்!

இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…

4 hours ago

என்னை மிரட்டுறாங்க எனக்கு பாதுகாப்பு கொடுங்க! டிஜிபிக்கு கடிதம் எழுதிய வீடியோ எடுத்த நபர்!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…

4 hours ago