Categories: உலகம்

50 டிகிரிக்கு மேல் கொளுத்திய வெயில்.. 550 ஹஜ் பயணிகள் பலி!

Published by
கெளதம்

சவுதி அரேபியா : மெக்காவில் வீசும் வெப்ப அலை காரணமாக உயிரிழந்த ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை 550 ஆக அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு 1.8 மில்லியன் யாத்ரீகர்கள் ஹஜ் பயணத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும், அவர்களில் 1.6 மில்லியன் பேர் வெளிநாட்டிலிருந்து வந்ததாக சவுதி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த திங்களன்று மெக்காவில் உள்ள கிராண்ட் மசூதியில் வெப்பநிலை 51.8 டிகிரி செல்சியஸை (125 பாரன்ஹீட்) எட்டியதாக சவுதி தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த கடும் வெப்பத்தை தாங்க முடியாமல், உயிரிழந்தவர்களில் குறைந்தது 323 பேர் எகிப்தியர்கள் என்றும், அவர்களில் பெரும்பாலோர் வெப்பம் தொடர்பாக உயிரிழந்ததாக இரண்டு அரபு தூதர்கள் மேற்கோளிட்டுள்ளனர்.

இதுவரை பதிவாகியுள்ள உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கையை 577 ஆக உள்ளது. மெக்காவில் உள்ள மிகப்பெரிய அல்-முஐசெமில் உள்ள பிணவறையில், எகிப்து, ஜோர்டான், இந்தோனேசியா, ஈரான் மற்றும் செனகல் ஆகிய நாடுகளில் இருந்து மொத்தம் 550 ஹஜ் பயணிகள் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

இருப்பினும், வெப்பம் காரணமாக எத்தனை இறப்புகள் நிகழ்ந்தன என்பதை பெரும்பாலான நாடுகள் இன்னும் குறிப்பிடவில்லை. கடந்த ஆண்டு பல்வேறு நாடுகளால் குறைந்தது 240 யாத்ரீகர்கள் இறந்ததாகக் கூறப்படுகிறது, அவர்களில் பெரும்பாலோர் இந்தோனேசியர்கள் என்று தெரிய வந்துள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

6 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

6 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

7 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

7 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

9 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

10 hours ago