auto brewery syndrome [file image]
Belgium: உடலில் தானாக மதுபான சுரக்கும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட பெல்ஜியம் நபர் Drink and Drive கேஸியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இப்ப உள்ள காலகட்டத்தில் பலருக்கு புதிய புதிய அரிய வகை நோய் இருப்பது மருத்துவ நிபுணர்களால் கண்டறியப்பட்டு வருகிறது. அந்தவகையில் பெல்ஜியத்தில் ஒருவருக்கு உடலில் தானாக மதுபான சுரக்கும் auto brewery syndrome (ABS) என்ற அரிய வகை நோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
பெல்ஜியத்தை சேர்ந்த 40 வயதான ஒருவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. ஏனெனில் அந்த நபர் ஆட்டோ ப்ரூவரி சிண்ட்ரோம் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று இதனால் அவரது உடலில் தானாக ஆல்கஹால் சுரக்கும் எனவும் கூறப்படுகிறது.
அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள அது நபரை மூன்று மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ஏபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்டதை உறுதிப்படுத்தினர். இதுகுறித்து பெல்ஜிய மருத்துவமனை AZ சின்ட்-லூகாஸின் மருத்துவ உயிரியலாளர் லிசா ஃப்ளோரின் கூறியதாவது, இதுபோன்ற அரியவகை நோயால் பாதிக்கப்ட்டுள்ளவர்களின் உடலில் தானாக மதுபான சுரக்கும்.
ஆனால் இதன் விளைவுகளை பாதிக்கப்பட்டவர்கள் குறைவாகவே உணர்வார்கள். ஏபிஎஸ் என்ற நோய் பிறக்கும்போதே வரக்கூடியவை அல்ல, குடல் தொடர்பான பாதிப்பில் அவதிப்படும்போது இதுபோன்ற அரியவகை நோய் உருவாகுகிறது. இந்த நோயானது வயிற்றில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளை புளிக்க வைத்து, ரத்தத்தில் எத்தனால் அளவை அதிகரித்து, போதையின் அறிகுறிகளை ஏற்படுத்துகிறது என்றார்.
இதன் காரணமாக Drink and Drive கேஸியில் குற்றச்சாட்டப்பட்ட அந்த நபருக்கு போதை அறிகுறிகள் இல்லை என்று வழக்கின் தீர்ப்பில் நீதிபதி தெரிவித்தனர். இதனால் அந்த நபரை ப்ரூஜஸ் போலீஸ் நீதிமன்றம் உடனடியாக விடுவித்து உத்தரவிட்டது.
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…
ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…