ஐயோ ஏசி இல்லை! வெப்பத்தால் விமானத்தில் மயக்கமடைந்த மக்கள்.!

ஸ்பெயினின் மலாகாவிலிருந்து இத்தாலியின் மிலனுக்குச் சென்று கொண்டிருந்த ரியானேர் விமானம் ஏர் கண்டிஷர் இல்லாமல் 3  மணி நேரத்திற்கும் மேலாக 42 டிகிரி செல்சியஸ்

Italy-bound flight

ஸ்பெயினின் மலாகாவிலிருந்து இத்தாலியின் மிலனுக்குச் சென்று கொண்டிருந்த ரியானேர் விமானம் ஏர் கண்டிஷர் இல்லாமல் 3  மணி நேரத்திற்கும் மேலாக 42 டிகிரி செல்சியஸ் வெப்பத்தின் மத்தியில் இருந்துள்ளது.

வெப்ப நிலை அதிகரித்ததன் காரணமாக விமானத்தில் இருந்த பயணிகள் சிலர் மயக்கமடைந்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

பிறகு அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் அமைதியாக இருக்குமாறு  வலியுறுத்தினர். விமானம் தரையிறங்கியதும் மருத்துவ குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்து அனைவருக்கும் சிகிச்சை அளித்தனர்.