Categories: உலகம்

நன்மைகள் நிறைந்த பறவை எச்சில் சூப்.. சீன மக்கள் சுவைக்கும் வினோதம்!

Published by
கெளதம்

சீனாவில் வினோதம்: பறவையின் எச்சில் நிறைந்த கூட்டை வைத்து தயாரிக்கப்படும் சூப்-ஐ சுவைக்க சீன மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒரு சிறிய சீன பறவையான ஸ்விஃப்ட்லெட்டின் கூடுகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த சூப், சரும பாதுகாப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனவும், வயதான தோற்றத்தை கட்டுப்படுத்த உதவும் எனவும், இது குறித்து சீன பாரம்பரிய மருத்துவ குறிப்புகளில் இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது சமூக வலைதளத்தின் ஆதிக்கத்தால், பறவை எச்சில் சூப், உலகம் முழுவதும் அறியப்பட்டு, அனைவரது கவனத்தை ஈர்த்து வருகிறது. வெறும், 500 கிராம் உலர்ந்த பறவை கூடின் விலை ரூ.1.6 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்திருக்கிறது.

அட ஆமாங்க… சீனாவின் பழமையானதாகவும் சுவையானதாகவும் கருதப்படும் பறவை கூடு சூப் சமூக ஊடகங்களில் பிரபலமடைந்து வருகிறது. இன்ஸ்டா போன்ற சமூக வலைத்தளங்களில் சமீபத்தில், இது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் திறனுக்காக அழகு துறையில் பிரபலமடைந்துள்ளது.

மலேசியா, தாய்லாந்து போன்ற பல இடங்களில், மக்கள் தங்கள் கூடுகளை சேகரிக்க ஸ்விப்லெட் பண்ணையை ஆரம்பித்துள்ளனர். இதில், அதிக வருவாய் கிடைப்பதால், காலி வீடுகளை ஸ்விஃப்ட்லெட் வீடுகளாகப் மாற்றி பண்ணையாக பயன்படுத்துகின்றன.

பறவைக் கூடு சூப்

பறவைக்கூடு சூப் (Bird’s Nest Soup) என்பது சீன பாரம்பரிய உணவாகும். இதற்கு பயன்படுத்தப்படும் முக்கியப் பொருள் பறவைக்கூடு. இதை சுவையூட்ட சிக்கன் ப்ரோத் மற்றும் கடல் உணவுகளுடன் சேர்த்து சமைக்கின்றனர். இதில், சிறப்பான சுவையும் மருத்துவ பலன்களும் உள்ளன என்று நம்பப்படுகிறது.

நன்மைகள் நிறைந்தது:

ஆசிய நாட்டின் பறவையின் எச்சில் நிறைந்த அந்த கூட்டில் கிளைகோபுரோட்டின்கள், கொலாஜன், அமினோ அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன, அவை சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துவதாகவும், சுருக்கங்களைக் குறைப்பதாகவும், இளமைத் தோற்றத்தை மேம்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது.

அழகு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக பாரம்பரிய சீன மருத்துவத்தில் பறவையின் கூடு நீண்டகாலமாக பயன்படுத்தப்படுவது அதன் நவீன தோல் பராமரிப்பு பயன்பாடுகளுக்கு நம்பகத்தன்மையை அளிக்கிறது.

Published by
கெளதம்

Recent Posts

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…

54 minutes ago

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

1 hour ago

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

2 hours ago

“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…

2 hours ago

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

3 hours ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

3 hours ago