gas explosion China [Image Source : CNN]
சீனாவின் வடமேற்கு நகரமான யின்சுவானில் உள்ள உணவகம் ஒன்றில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் குறைந்தது 31 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொழுதுபோக்கு மற்றும் உணவகங்கள் அதிகம் உள்ள பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிராகன் படகு திருவிழா விடுமுறைக்கு முன்னதாக, நேற்று மாலையில், நிங்சியா ஹுய் தன்னாட்சி பிராந்தியத்தில், தலைநகர் யின்சுவானில் உள்ள பார்பிக்யூ உணவகத்தில் இருந்து இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
பாதுகாப்பு முயற்சிகள் இருந்தபோதிலும், எரிவாயு மற்றும் இரசாயன வெடிப்புகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் துரதிருஷ்டவசமாக சீனாவில் அவ்வப்போது நடந்து வருகிறது. இதற்கு முன்னதாக, 2015 ஆம் ஆண்டில், வடக்கு துறைமுக நகரமான தியான்ஜினில் நடந்த ஒரு சோகமான தொடர் குண்டுவெடிப்புகளில் 173 பேர் உயிரிழந்தனர்.
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…