அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா தலைவர் கிம் ஜாங்-உன் இருவரது சந்திப்பு நேற்று வடகொரியாவில் நடைபெற்றது. இவர்களது சந்திப்பை “இது ஒரு அற்புதமான வரலாற்று நிகழ்வு” என்று வடகொரியா அரசு ஊடகமான கேசிஎன்ஏ நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளது. மேலும், பதவியில் இருக்கும் போது ஞாயிற்றுக்கிழமை வடகொரிய மண்ணில் அடியெடுத்து வைத்துள்ள அதிபர் என்ற பெருமையை டிரம்ப் அவர்கள் பெற்றுள்ளார்.
தென் கொரியாவிற்கு சுற்றுப் பயணமாக வந்த டிரம்ப் ,கிம் அவர்களிடம் சந்திக்கலாமா என்று அழைப்பு விடுத்துள்ளார். அதன் அடிப்படையில் இந்த சந்திப்பானது நடந்துள்ளது. ஒரே ஆண்டில் மூன்றாவது முறை இவர்களது சந்திப்பு நடைபெற்றுள்ளது. அமெரிக்காவை கடும் எதிரியாகவே கண்ட வட கொரியா மக்களுக்கு இவர்களது இந்த சந்திப்பு அதிர்ச்சியாக உள்ளது.
சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் , அணு ஆயுத பயன்பாடு குறித்து இரு நாடுகளின் சார்பில் குழு நிர்ணயிப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. முடிவில் இருவரும் ஒருவரை ஒருவர் தங்கள் நாட்டிற்கு வரும் படி அழைப்பு விடுத்தனர்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…