Categories: உலகம்

இஸ்ரேல் தாக்குதல் : காசாவில் இருந்து 3.4 லட்சம் பேர் வெளியேற்றம்.! ஐ.நா அறிவிப்பு.!

Published by
மணிகண்டன்

கடந்த அக்டோபர் 6ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலுக்கு பிறகு, இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையேயான மோதல் தீவிரமடைந்து உள்ளது. இதுவரை இந்த தாக்குதலில் இஸ்ரேல் – பாலஸ்தீனியம் என இரு நாட்டை சேர்ந்த மக்கள் சுமார் 4 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

ஹமாஸ் அமைப்பினர் அதிகமாக இருக்கும் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி குண்டு மழை பொழிந்து வருகிறது. காஸாவில் , ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக கருதி பல்வேறு கட்டடங்களை இஸ்ரேல் ராணுவம் வான்வெளி தாக்குதல் மூலம் தகர்த்து வருகிறது.

காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கிருக்கும் பாலஸ்தீனிய மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். காஸா பகுதியில் இருக்கும் 5 நகரங்களில் மொத்தமாக சுமார் 20 லட்சம் பேர் வசித்து வந்தனர்.

இங்கு தாக்குதல் அதிகமாக நடைபெறும் பகுதியில் இருந்து பாலஸ்தீனிய மக்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். நேற்று ஐநா மனித வள அதிகாரி வெளியிட்ட செய்தி குறிப்பில், இதுவரை சுமார் 3,40,000 பாலஸ்தீனிய மக்கள் காஸா பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், காசாவில் தற்போது பாதுகாப்பான இடம் என்று ஒரு சென்டிமீட்டர் பரப்பளவு கூட இல்லை. காஸாவில் இருந்து மீட்கப்பட்ட மக்கள் ஐ.நா ஏற்படுத்திய எல்லை பகுதி நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  தற்போது நாம் பார்ப்பது கற்பனைக்கு அப்பாற்பட்டது. இந்தப் போரின் மூலம் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மிகவும் பெரியது.  இதற்கு முன்னர் இவ்வாறு நடந்தது இல்லை என்பது போல தெரிகிறது.

இஸ்ரேல் தாக்குதல் காரணமாக காஸா பகுதியில் பொதுச் சேவைகள் நிறுத்தப்பட்டு, முழுவதுமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருள் சூழ்ந்து காணப்படுகிறது.  அங்கு கழிவுநீர் வெளியேற்றம் கூட தோல்வி அடைந்துள்ளது. இது ஒரு பேரழிவு என்று ஐநா மனித வள அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நேரத்தில், காஸா பகுதி தாக்குதல் பற்றி எதுவும் கூறாமல், நடவடிக்கை எடுக்காமல் கடந்து சென்றால் அது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் ஐநா மனிதவள அதிகாரி கூறினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…

5 hours ago

எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

6 hours ago

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…

7 hours ago

ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…

7 hours ago

பாமக மோதல் : பொறுப்பை பறித்த அன்புமணி… “அவருக்கு அதிகாரமில்லை” டென்ஷனான அருள்!

பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…

8 hours ago

த.வெ.க தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் எப்போது சுற்றுப்பயணம்? ஆதவ் அர்ஜுனா முக்கிய தகவல்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…

9 hours ago