Categories: உலகம்

கதிகலங்கும் காசா.! பல்வேறு விதமான வெடிகுண்டுகளை இஸ்ரேலுக்கு அனுப்பும் அமெரிக்கா.!

Published by
மணிகண்டன்

Isreal : இஸ்ரேல் ராணுவத்திற்கு அமெரிக்கா ஆயுதங்களை அனுப்பி உதவி செய்துள்ளது.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஹாமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு தற்போது வரையில் இஸ்ரேல் ராணுவம், ஹாமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா நகரின் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதுவரை காசா நகரில் சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் அதில் பெரும்பாலும் காஸாவில் வசிக்கும் பொதுமக்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

போரை நிறுத்த சொல்லி பல்வேறு நாடுகள் கூறியும், அதனை இஸ்ரேல் பிரதமர் ஏற்க மறுத்து, ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக அழிக்கும் வரையில் தாக்குதல் தொடரும் என திட்டவட்டமாக கூறி வருகிறார். இஸ்ரேலுக்கு முன்னர் இருந்தே ஆயுதங்களை அளித்து உதவி வரும் அமெரிக்காவும் காசா நகர் மீதான தாக்குதலை தற்காலிமாகவாவது நிறுத்த கோரி வலியுறுத்தி வருகிறது.

போர் நிறுத்தம் பற்றி அமெரிக்கா கருத்து கூறி வந்தாலும், இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆயுதங்களை அனுப்பி தாக்குதலுக்கும் உதவி வருகிறது அமெரிக்கா. அண்மையில், இஸ்ரேல் ராணுவத்திற்கு,  பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான வெடிகுண்டுகள் மற்றும் போர் விமானங்களை இஸ்ரேலுக்கு அனுப்ப அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த புதிய ஆயுத பரிமாற்றத்தில்,  1,800 MK84 2,000-பவுண்டு வெடிகுண்டுகள் மற்றும் 500 MK82 500-பவுண்டு வெடிகுண்டுகள் மற்றும் 25 F-35 ஆகிய ஆயுதங்களை அமெரிக்கா இஸ்ரேலுக்கு அனுப்பி உள்ளது. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு மட்டும்  ஆண்டுக்கு 3.8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இராணுவ உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.

காசா நகரில் தாக்குதலை தொடர்ந்து வரும் இஸ்ரேலுக்கு, அமெரிக்கா தொடர்ந்து உதவி வருவது, ஆளும் ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரிடமே எதிர்ப்பை சம்பாதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  இஸ்ரேலுக்கான அமெரிக்க இராணுவ உதவியை நிறுத்துமாறும் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

Recent Posts

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…

10 hours ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

10 hours ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

11 hours ago

யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…

11 hours ago

புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!

பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…

12 hours ago

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…

12 hours ago