உலகம்

Guinness Record : மிக நீளமான தாடியை வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க பெண்மணி..!

Published by
லீனா

அமெரிக்காவின் மிச்சிகனைச் சேர்ந்த பெண்மணி எரின் ஹனிகட் (38). இவருக்கு, பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) என்ற பிரச்னை உள்ளது. இதனால், ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தும் மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய், எடை அதிகரிப்பு, கருவுறாமை மற்றும் அதிகப்படியான முடி வளர்ச்சியை ஏற்படுத்தும்.

இந்த நிலையில், எரினின் முக முடிகள் அவளுக்கு 13 வயதாக இருந்தபோது வளர ஆரம்பித்துள்ளது. ஷேவிங், வாக்சிங் மற்றும் முடியை அகற்றும் பொருட்களைப் பயன்படுத்தி தனது முடியை தொடர்ந்து அகற்றி வந்துள்ளார். ஆனால், அவருக்கு தொடர்ந்து முடி வளர்ந்து வந்துள்ளது.

எரின் தனது டீன் ஏஜ் வயது முழுவதும் இதைத் தொடர்ந்து செய்து வந்தாள். இந்த நிலையில், அப்பெண் தன் பார்வையை ஓரளவு இழந்த பிறகு, ஷேவிங் செய்வதில் சோர்வடைந்தாள்.  கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக நாடு முழுவதும் முடங்கிய நிலையில், அவர் தனது தாடியை வளர்க்க முடிவு  செய்தார்.

இந்த நிலையில், தற்போது எரினின் தாடி 30 செமீ (11.81 அங்குலம்) அளவைக் கொண்டுள்ளது. இதனையடுத்து, இவர் உலகில் மிக நீளமான தாடியை கொண்ட பெண்மணி என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். முந்தைய சாதனை 25.5 செமீ (10.04 அங்குலம்) நீளமான தாடி 75 வயதான விவியன் வீலருக்கு இருந்துள்ளது. இந்த சாதனையை தற்போது எரின் முறியடித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…

10 hours ago

GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…

11 hours ago

RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…

12 hours ago

சாத்தான்குளத்தில் கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து…, 20 சவரன் நகைகள் மீட்பு.!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…

13 hours ago

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…

16 hours ago

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

16 hours ago