US President Joe Biden [Image source : Reuters]
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் – பாலஸ்தீன போர் தொடர்ந்து வருகிறது. இந்த போரில் இருநாடுகளிலும் 5000-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் உணவு, நீர் இன்றி மிகவும் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். காஸாவை இஸ்ரேல் ராணுவம் ஆக்கிரமிப்பது மிகப்பெரிய தவறாக அமையும்; காஸாவில் இருந்து ஹமாஸ் படையினர் வெளியேற்றப்பட வேண்டும். ஆனால், அதனை ஆக்கிரமிக்கக்கூடாது என்றும் கருத்து தெரிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து, காஸாவில் மருத்துவமனை தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் சென்று, இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேசி, இஸ்ரேலுக்கு முழுமையாக அமெரிக்கா துணை நிற்கும் என திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், தற்போது அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலை ஏற்றுக் கொள்ள முடியாது. உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதலை எப்படி ஏற்க முடியாதோ, அதேபோல் இஸ்ரேல் மிதமான தாக்குதலையும் ஏற்க முடியாது.
இந்த ஆண்டிலிருந்து இஸ்ரேல் மற்றும் உக்ரைனுக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு அதிகப்படுத்தப்படும். இஸ்ரேலில் குறைந்தது 32 அமெரிக்கர்கள் உட்பட 1300 பேருக்கு அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸின் பிணை கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர் பிடிக்கப்பட்ட அமெரிக்கர்களை மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி (65) மற்றும்…
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…