Categories: உலகம்

ஆஸ்திரேலியாவில் 5 பெண்களை போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த இந்திய வம்சாவளி.!

Published by
கெளதம்

5 கொரியப் பெண்களை போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த, இந்திய வம்சாவளி சேர்ந்த நபரால் ஆஸ்திரேலியாவில் பரபரப்பு.

ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர், ஐந்து கொரியப் பெண்களை போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், மேலும் அதனை தனது ரகசிய கேமராவில் படம்பிடித்ததாலல் கைது செய்துப்பட்டுள்ளதாக சிட்னி மார்னிங் ஹெரால்ட் செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அரசியல் உறவுகளுடன் ஆஸ்திரேலியாவில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களின் முக்கிய உறுப்பினரான பாலேஷ் தன்கர் என்பவர், கொரியப் பெண்களை குறிவைத்து, வேலைவாய்ப்பு கொடுப்பதாக விளம்பரங்கள் செய்து தனது வலையில் 5 பெண்களை சிக்க வைத்துள்ளார். பின்னர், அவர்களிடம் நெருக்கமாகி, போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறபடுகிறது.

அது  மட்டும் இல்லாமல், படுக்கை அறையில் கடிகாரத்தில் கேமராவை மறைத்து வைத்து, உடல் உறவு கொண்டதை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். 5 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த தன்கர், 6 வது பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடும்போது, அந்த பெண் சுதாரித்ததால் அந்த பெண் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் தன்கரை கைது செய்து விசாரிக்கையில், இந்த பாலியல் சீண்டல் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும், அவரது மொபைல் போனை சோதனை செய்ததில், பல வீடியோக்கள் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சிட்னியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் அவர் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் இந்திய வம்சாவளி சேர்ந்த நபர் ஈடுபட்டுள்ளதால் ஆஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

ஹனிமூன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்..! வசமாக சிக்கிய புதுப்பெண்.., பின்னணி என்ன?

ஹனிமூன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்..! வசமாக சிக்கிய புதுப்பெண்.., பின்னணி என்ன?

மேகாலயா : இந்தூரைச் சேர்ந்த ராஜா ராகுவன்ஷி மற்றும் சோனம் ராகுவன்ஷி என்ற தம்பதியினர் கடந்த மே 11ம் தேதி…

15 minutes ago

டெஸ்ட் போட்டிக்கான மைதானங்களை மாற்றி பிசிசிஐ அறிவிப்பு.!

டெல்லி : இந்த வருடம் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளை சொந்த மண்ணில் எதிர்கொள்ள உள்ளது.…

1 hour ago

கோழிக்கோடு அருகே நடுக்கடலில் சரக்கு கப்பலில் தீ விபத்து.!

கோழிக்கோடு : கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பேப்பூர் கடற்கரையில் ஒரு சரக்குக் கப்பல் தீப்பிடித்தது. இந்தக் கப்பல் சிங்கப்பூர்…

2 hours ago

தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளராக அருண்ராஜ் நியமனம்.!

சென்னை : தவெகவில் இன்று புதிதாக இணைந்த முன்னாள் IRS அதிகாரி அருண்ராஜ்-க்கு கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கி…

2 hours ago

இன்று இந்த 11 மாவட்டங்களில் மழை வெளுக்கும்! அலர்ட் விட்ட வானிலை மையம்!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று பல மாவட்டங்களில் கனமழைக்கு…

3 hours ago

“இனி அரசு விடுதிகளில் பெண் காவலாளிகளை நியமிக்க முடிவு” – அமைச்சர் கீதா ஜீவன்

சென்னை : தாம்பரம் பகுதியில் உள்ள அரசு விடுதியில் தங்கி 8-ஆம் வகுப்பு படித்து வரும் 13-வயது சிறுமி ஒருவருக்கு பாலியல்…

4 hours ago