Japan [File Image]
ஜப்பான் நாடு, பாலியல் குற்றச்சட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதன்படி பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ ஒப்புதல் வயது 13ல் இருந்து 16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
உலகிலேயே மிகக் குறைந்த சட்டப்பூர்வ பாலியல் ஒப்புதல் வயது ஜப்பானில் தான் இருந்து வந்தது. இதன் காரணமாக குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வந்த நிலையில், தற்போது வயது வரம்பை ஜப்பான் அரசு உயர்த்தியுள்ளது.
ஜப்பான் பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட இந்த புதிய சீர்திருத்தம் ஒரு நூற்றாண்டுக்கும் மேலான காத்திருப்புக்குப் பிறகு வந்துள்ளது. கடைசியாக 1907-ல் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய சட்டத்தின் கீழ், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் நோக்கத்திற்காக மயக்கி, மிரட்டி அல்லது பணத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனை அல்லது கிட்டத்தட்ட ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
மேலும், 16 வயது கீழ் உள்ளவர்களை அனுமதியின்றி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும். அதாவது ஒருவரின் சம்மதத்தின் வயதுக்கு கீழே எந்தவொரு பாலியல் செயல்பாடும் கற்பழிப்பாகக் கருதப்படுகிறது.
சரியான காரணமின்றி, அந்தரங்க உறுப்புகள், உள்ளாடைகள் அல்லது அநாகரீகமான செயல்களை ரகசியமாக படம்பிடித்தது நிரூபிக்கப்பட்டால், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 18 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…