Categories: உலகம்

மோடியின் அமெரிக்க பயணம்…இந்தோ-பசிபிக் உறுதிப்பாடு வலு பெறும்; வெள்ளை மாளிகை.!

Published by
Muthu Kumar

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம், இந்தோ-பசிபிக் உறுதிப் பாட்டை மேலும் வலுப்படுத்தும் என வெள்ளை மாளிகை அறிக்கை.

பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஜூன் மாதம் 22ஆம் தேதி அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அதிபர் ஜோ பைடனின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு மேற்கொள்ளும் இந்த  அதிகாரப்பூர்வ அரசு முறை பயணம் வரலாற்று சிறப்புமிக்கது என அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.

மேலும் பிரதமர் மோடியின் இந்த பயணத்தில் அரசு விருந்தும் இருக்கும் என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் என வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த பயணத்தின் மூலம் இருதரப்பு உறவுகளுக்கு குறிப்பிடத்தக்க புதிய உத்வேகம் ஏற்படும் என அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்தார். மேலும் மோடியின் அமெரிக்க பயணம் இரு நாடுகளுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகத்திற்கும் வருங்கால முன்னேற்றத்திற்கு வழிகாட்டுதல்களை வழங்குவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்று சந்து கூறினார்.

இது தவிர ஜனாதிபதி பைடனும், பிரதமர் மோடியும் சில வாரங்களில் ஆஸ்திரேலியாவில் நடக்கும் குவாட்(Quad) லீடர்ஸ் மாநாட்டிலும், இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டிலும் சந்திக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Muthu Kumar

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

9 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

10 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago