ChildUseSmartPhone [Image Source: Getty Images]
சீனாவின் இணைய கண்காணிப்பு அமைப்பான சைபர்ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் ஆஃப் சீனா (சிஏசி), குழந்தைகள் ஸ்மார்ட்போன்களில் செலவிடும் நேரத்தைக் கட்டுப்படுத்த விதிமுறைகளை வகுத்துள்ளதோடு, அதற்கான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.
அதன்படி, குழந்தைகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மொபைல் சாதனங்களில் பெரும்பாலான இணைய சேவைகளைப் பயன்படுத்த அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது. 16 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்த முடியும்.
மேலும், 8 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவர். 8 வயதுக்குட்பட்டவர்களுக்கு 40 நிமிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்க புதிய விதிகள் அவசியம் என்று சிஏசி தெரிவித்துள்ளது. அதிகப்படியான நேரம் மொபைல் பார்ப்பது உடல் பருமன், தூக்கமின்மை மற்றும் கவனக்குறைவு ஹைபராக்டிவிட்டி கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது.
இந்த சமீபத்திய கட்டுப்பாடுகள், சீனாவின் மிகப்பெரிய ஆன்லைன் கேம் நிறுவனமான டென்சென்ட் மற்றும் பிரபலமான ஷார்ட்-வீடியோ பிளாட்ஃபார்ம் டூயினை இயக்கும் பைட் டான்ஸ் போன்ற நிறுவனங்களை பாதிக்கும் என்று செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…
ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…