Categories: உலகம்

ஓமான் எண்ணெய் கப்பல் விபத்து ..! கடலில் சிக்கிய 8 இந்தியர்கள் மீட்பு ..!

Published by
அகில் R

ஓமன் : கொமரோஸ் நாட்டை சேர்ந்த பிரெஸ்டீஜ் பால்கன் (Prestige Falcon) எனும் எண்ணெய் டேங்கர் கப்பலானது, ராஸ் மத்ரகாவில் இருந்து தென்கிழக்கு பகுதியில் சுமார் 25 கடல் மைல் தொலைவில் அமைந்திருக்கும் ஓமனின் துகம் துறைமுகத்துக்கு எண்ணெய்யை ஏற்றி கொண்டு சென்றுள்ளது.

கடந்த ஜூலை-15ம் தேதி எண்ணெய் ஏற்றி கொண்டு வந்த அந்த டேங்கர் கப்பல் திடீரென கடலில் கவிழ்ந்தது. இந்த எண்ணெய் கப்பலில் 16 பேர் பயணித்து உள்ளனர் அதில் 13 பேர்கள் இந்தியர்கள் எனவும் மற்ற 3 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள் எனவும் ஓமனின் கடல்வழி பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த எண்ணெய் கப்பல் கவிழ்ந்ததில் காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனை தொடர்ந்து இந்த மீட்பு பணியில், இந்திய கடற்படையை சேர்ந்த போர்க்கப்பலான ஐஎன்எஸ் டெக் (INS Teg) கப்பலும் இணைந்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இதில் தற்போது வரை 8 இந்தியர்கள் மற்றும் இலங்கையை சேர்ந்த ஒருவர் மட்டும் மீட்கப்பட்டு உள்ளனர். மேலும், காணாமல் போன எஞ்சிய பேரையும் தேடும் பணி தீவிரமாக இன்றும் நடைபெற்று வருகிறது.

Published by
அகில் R

Recent Posts

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

1 hour ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

2 hours ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

2 hours ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

3 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

4 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

5 hours ago