இந்த 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வரக்கூடாது…உத்தரவு போட்ட அதிபர் டிரம்ப்!
பாதுகாப்பு கருதி 12 நாடுகளைச் சேர்ந்த தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,ஒரு உத்தரவு மூலம் சில நாடுகளுக்கு அமெரிக்காவுக்குள் வர தடையும், சில நாடுகளுக்கு கட்டுப்பாடுகளும் விதித்தார். இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் இந்தப் பட்டியலில் உள்ளது. இந்தத் தடைகள், அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கவும் விதிக்கப்பட்டவை. எந்தெந்த நாடுகள் இருக்கிறது என்பது பற்றி பார்ப்போம்.
முழுமையான தடை உள்ள நாடுகள் (சிவப்பு பட்டியல்)
ழுமையான பயணத் தடை (Red List) விதிக்கப்பட்ட 12 நாடுகள் ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ குடியரசு, ஈக்குவடோரியல் கினி, எரித்ரியா, ஹைட்டி, இரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன். இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் எந்த காரணத்திற்காகவும் (சுற்றுலா, படிப்பு, வணிகம்) வர முடியாது. இந்த உத்தரவு, இந்த நாடுகளின் பயணிகளைப் பற்றிய தகவல்கள் பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப இல்லை என்று கூறி விதிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு ஜூன் 9, 2025 முதல் (திங்கட்கிழமை) அமலுக்கு வருகிறது.
பகுதியளவு தடை
அதே சமயம், 7 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பகுதியளவு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான், வெனிசுலா ஆகிய நாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு விசா பெற முயற்சிக்கும்போது, அவர்கள் நேரில் நேர்காணலுக்கு செல்ல வேண்டும். மேலும், அவர்களின் ஆவணங்கள் மிகக் கவனமாக சோதிக்கப்படும். இதனால் விசா பெறுவது கடினம், ஆனால் முற்றிலும் தடை செய்யப்படவில்லை.
இந்தப் அவசர அறிவிப்பு அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் வெளியிடப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் அபிகெய்ல் ஜாக்சன், பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ்-இடம் பேசுகையில், “அமெரிக்க மக்களைப் பாதுகாக்கும் தனது உறுதிமொழியை அதிபர் டிரம்ப் நிறைவேற்றி வருகிறார்.
தீங்கு விளைவிக்கக் கூடிய வெளிநாட்டவர்களிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார். மேலும், இந்தக் கட்டுப்பாடுகள் நாடு சார்ந்தவை என்றும், முறையான பின்னணி சோதனை இல்லாத, விசா காலாவதி விகிதங்கள் அதிகமாக உள்ள, அல்லது பாதுகாப்பு தகவல்களைப் பகிர்ந்து கொள்ளத் தவறும் நாடுகளை இலக்காகக் கொண்டவை என்றும் விளக்கம் அளித்து பேசினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
11 பேர் உயிரிழந்த விவகாரம்: ‘கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை வேண்டாம்’ – உயர் நீதிமன்றம்!
June 6, 2025
அனைத்து விதமான கிரிக்கெட்டிற்கும் குட் பை சொன்ன பியூஷ் சாவ்லா.!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
June 6, 2025