Categories: உலகம்

பிலிப்பைன்ஸ் ஆடை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 16 பேர் பலி!

Published by
கெளதம்

பிலிப்பைன்ஸின் மெட்ரோ மணிலாவில் உள்ள கியூசான் தலைநகரில் டி-சர்ட் அச்சடிக்கும் தொழிலுக்கான கிடங்காகவும், அது தொழிலாளர்கள் தங்கும் விடுதியாகவும் பயன்படுத்தப்பட்ட கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஆடை தொழிற்சாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் வணிக உரிமையாளர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று மாலை 5.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பின்னர், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல், 2017 ஆம் ஆண்டில், தெற்கு டாவோ நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 37 பேர் உயிரிழந்தனர். கடந்த மே மாதம், மணிலாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க மத்திய தபால் அலுவலகக் கட்டிடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

Published by
கெளதம்

Recent Posts

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

1 hour ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

2 hours ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

2 hours ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

3 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

4 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

5 hours ago