Joe Dituri [Image source : Fox 4 News]
அமெரிக்கா: புளோரிடா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் 74 நாட்கள் காற்றழுத்த தாழ்வு இல்லாமல் நீருக்கடியில் வாழ்ந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
ஜோசப் டிடுரி என்பவர் மார்ச் 1 அன்று இந்த பயணத்தைத் தொடங்கி, தற்பொழுது 74 நாட்களாக நீருக்கடியில் ஜூல்ஸின் அண்டர்சீ லாட்ஜில் வசித்து வருகிறாராம். புளோரிடாவின் கீ லார்கோவில் 30 அடி கடல் ஆழமான அடிப்பகுதியில் அவரது லாட்ஜ் அமைந்துள்ளது.
73 நாட்கள் நீருக்கடியில் வாழ்ந்த இரண்டு பேராசிரியர்களின் முந்தைய உலக சாதனையை ஒரு நாட்கள் அதிகமாக இருந்து முறியடித்துள்ளார். மேலும், அவரது சாதனை நாட்கள் இன்னும் முடிவடையவில்லை. அவர், ஜூன் 9ம் தேதி வரை அந்த லாட்ஜில் தங்கி 100 நாட்களை கடக்க திமிட்டுள்ளாராம்.
இதற்கிடையில், அவர் நீருக்கடியில் இருக்கும்போது மருத்துவ நிபுணர்களால் நெருக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறார் .அவ்வப்போது, தனது சிறுநீரக மாதிரிகளை மருத்துவர்களிடம் சோதனை செய்து கொள்கிறர். இது தொடர்பான வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…