கொரோனா பரவல் எதிரொலி காரணமாக சவூதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சப்ளை வேலைக்கு ரோபோக்கள் வைக்கப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் கொரோனா பரவலானது கடந்த ஆண்டை விட,தற்போது மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில்,சவூதி அரேபியாவின் ஜாசன் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலில் மனிதர்களுக்குப் பதிலாக சப்ளை வேலைக்கு ரோபோக்கள் சேர்க்கப்படுகின்றன.
இந்த ரோபோக்கள்,வாடிக்கையாளர்களை மிகச் சிறப்பாக கவனித்துக் கொள்கின்றன.வாடிக்கையாளர்கள் என்ன ஆர்டர் செய்தார்களோ அவற்றை தாமதிக்காமல் உடனே கொண்டு வந்து கொடுக்கின்றன.
இதனையடுத்து,வெள்ளை நிறத்தில் உள்ள இந்த ரோபோக்கள் உணவுகளை கையில் வைத்துக் கொண்டு அங்குமிங்கும் செல்வதினால்,பார்வையாளர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர் ரேகம் ஓமர் கூறுகையில்,”இந்த ரோபோக்களானது அருகில் உள்ள அனைத்தையும் உணர்ந்து செயல்படக் கூடியது.மேலும்,ஹோட்டலின் விதிமுறைகளையும் நன்கு புரிந்து கொண்டுள்ளது.எனவே,வாடிக்கையாளர்கள் இந்த ரோபோக்களை மிகவும் விரும்புகின்றனர்”,என்று தெரிவித்தார்.
இந்த நிலையில்,மனிதர்களுக்குப் பதிலாக ரோபோக்களை வேலைக்கு வைப்பதனால் மனிதர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் என்று சவுதியில் உள்ள மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…