[file image]
ரஷ்யப் படைகள் உக்ரேனிய நகரத்தை நோக்கி எல்லாப் பக்கங்களிலிருந்தும் முன்னேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான யுத்தம் கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய நிலையில், இன்றும் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான தாக்குதலில் லட்சக்கணக்கான ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையில் நடந்து வந்த தாக்குதல் சற்று குறைந்துள்ள நிலையில், அவ்வப்போது ஏவுகணை தாக்குதல் நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பு ஒரே இரவில் உக்ரனின் கிய்வ் நகரம் மீது 70-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் நீட்டிப்பு.! அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்பு.!
இது தான் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல் என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். உக்ரைனில் ஏவப்பட்ட 75 ஆளில்லா விமானங்களில் 71 சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்று அவ்வப்போது, உக்ரனின் நகரம் மீது ரஷ்ய படைகள் மீண்டும் படையெடுக்க தொடங்கியுள்ளது. இதில், தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ரஷ்யப் படைகள் எல்லாப் பக்கங்களிலிருந்தும் உக்ரேனிய நகரத்தை நோக்கி முன்னேறி வருகின்றன என தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யப் படைகள் கிழக்கு உக்ரேனிய நகரமான அவ்திவ்காவைக் கைப்பற்றுவதற்கான முயற்சியை தீவிரப்படுத்தி வருகின்றன. பல வாரகால தாக்குதலுக்கு பிறகு அனைத்துப் பக்கங்களிலும் முன்னேற முயற்சிப்பதாக அந்நகரத்தின் உயர் அதிகாரி கூறியுள்ளார்.
ரஷ்ய துருப்புக்கள், 21 மாத யுத்தத்தில் கிழக்கு உக்ரைனின் டோன்பாஸ் பகுதிக்கு சென்றது, அக்டோபர் நடுப்பகுதியில் இருந்து அவ்திவ்கா மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனால், மீண்டும் ரஷ்யா – உக்ரைன் இடையிலான மோதல்களின் தீவிரம் அதிகரித்து வருகிறது என கூறப்படுகிறது.
கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…
சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…
சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…
சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…
ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…
நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…