ஸ்வீடனில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்ட ஒரு ஆராய்ச்சி ராக்கெட் செயலிழந்து அண்டை நாடான நார்வேக்குள் விழுந்துள்ளது.
வடக்கு ஸ்வீடனில் உள்ள எஸ்ரேஞ்ச் விண்வெளி மையத்தில் இருந்து கடந்த ஏப்ரல் 24ம் தேதி (திங்கள்கிழமை) அதிகாலை ஸ்வீடன் ஸ்பேஸ் கார்ப் (எஸ்எஸ்சி) மூலம் ஒரு ஆராய்ச்சி ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. ஆனால், அந்த ஆராய்ச்சி ராக்கெட் செயலிழந்து அண்டை நாடான நார்வேக்குள் விழுந்துள்ளது. இந்த ராக்கெட் 250 கிமீ உயரத்தை எட்டியவுடன் பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனால் ராக்கெட் செயலிழந்து நார்வேக்குள் 15 கிமீ (9.32 மைல்) தொலைவில் விழுந்துள்ளது. இதுகுறித்து எஸ்எஸ்சி தகவல் தொடர்புத் தலைவர் பிலிப் ஓல்சன் கூறுகையில், இந்த ராக்கெட் அருகிலுள்ள குடியேற்றத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில், 1,000 மீட்டர் உயரத்தில் மலைகளில் தரையிறங்கியது என்று தெரிவித்தார்.
மேலும், நாங்கள் ஸ்வீடிஷ் மற்றும் நோர்வே அரசாங்கங்களுக்கும் தெரிவித்திருக்கிறோம். பேலோடை மீட்டெடுக்கும் பணி நடந்து வருகிறது என்று பிலிப் ஓல்சன் கூறியுள்ளார். ராக்கெட் விபத்தால் சுற்றுப்புற பகுதிகளில் ஏதேனும் சேதம் ஏற்பட்டதா என்பது குறித்து தெரியவில்லை. ஸ்வீடிஷ் ஸ்பேஸ் கார்ப்பரேஷனின் செய்திக்குறிப்பில் இருந்து இந்த விபத்து குறித்து அறிந்ததாக நார்வேயின் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…