Qwait Fire Accident [file image]
குவைத்: குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பரிதாபமாக உயிரிழந்த 45 இந்தியர்களின் சடலங்கள் கொச்சிக்கு கொண்டு வரப்படுகிறது.
குவைத் நாட்டில் உள்ள மங்காப் பகுதியில் அமைந்துள்ள ஒரு அடுக்கு மாடியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 45 இந்தியர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 50 பேர் மருத்துவனமானயில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவந்தது.
இந்த தீ விபத்தில் பலியான 45 இந்தியர்களில் கேரளாவை சேர்ந்தவர்கள் 24 பேர்களும், தமிழகத்தை சேர்ந்த 7 பெரும், எஞ்சியவர்கள் ஆந்திரா, பிஹார் போன்ற மாநிலங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது இதில் பலியான 45 இந்தியர்களின் சடலங்களையும் விமான படையினரின் போர் விமானம் மூலம் கொச்சிக்கு காலை 10.30 மணிக்கு கொண்டு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின் கொச்சிக்கு வந்தடைந்த உடல்களை ஆம்புலன்ஸ்ஸின் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், இதற்கு முன்னேறப்பாடாக கொச்சி விமான நிலையத்தில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட இதர ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.
கொச்சி வந்தடையும் 7 தமிழர்களின் உடல்களை, உடனடியாக அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், தீ விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…