Categories: உலகம்

ஐபிஎல்-ஐ குறிவைக்கும் சவூதி அரேபியா.! 5 பில்லியன் டாலர் முதலீடு.?

Published by
மணிகண்டன்

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில், இந்தியன் பிரீமியர் லீக் எனும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை 16 சீசன்கள் கடந்துவிட்டன. இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) கட்டுப்பாட்டில் இந்த ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த போட்டியில் பங்கேற்க வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் இந்தியா வந்து இரண்டு மாதங்கள் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருவார்கள். இது உலகம் முழுக்க பிரபலமாக இருக்கும் தொடரில் மிக முக்கியமானதாகும். மேலும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் லாபகரமான கூட்டமைப்பாகவும் ஐபிஎல் இருந்து வருகிறது.

இப்படி லாபம் தரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை, மேலும் விரிவுபடுத்த சவூதி அரேபிய அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. அதில் அதிக அளவு முதலீடு செய்யவும் சவுதி அரேபிய மன்னர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

தனியார் செய்தி நிறுவனத்திற்கு சவுதி அரேபிய மன்னர் முகமது பின் சல்மான் கூறுகையில், ஐபிஎல் கூட்டமைப்பை 30 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு ஹோல்டிங் நிறுவனமாக மாற்றலாம் எனவும், அதில் 5 மில்லியன் டாலர் அளவுக்கு சவுதி அரேபியா அரசு முதலீடு செய்ய விருப்பம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல் கட்டமைப்பானது மற்ற நாடுகள் வரை விரிவடையச் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

சவுதி அரேபிய மன்னர் முகமது பின் சல்மான் இதற்கு முன்னர் இந்தியா வந்தபோது கூட ஐபிஎல் தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சவூதி அரேபிய அரசு ஏற்கனவே, கால்பந்தாட்டம், கோல்ப் ஆகிய விளையாட்டுகளிலும் முதலீடு செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) நடத்தும் இந்த போட்டியில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் தான் முடிவு எடுக்க முடியும். இதுவரை சவுதி அரேபியா இளவரசர் கூறியது பற்றி BCCI எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

Published by
மணிகண்டன்

Recent Posts

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

1 hour ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

2 hours ago

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…

2 hours ago

கடலுக்கு அடியில் MIGM கண்ணிவெடி? இந்திய கடற்படையின் அசத்திய சோதனை வெற்றி!

டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…

3 hours ago

திருவிழா பிரச்சனையா? இரு தரப்பினர் மோதல்., வீடுகளுக்கு தீ வைப்பு! புதுக்கோட்டை காவல்துறை விளக்கம்!

புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…

4 hours ago

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

11 hours ago