Categories: உலகம்

நைஜரில் ராணுவ ஆட்சி.! காவல்துறை கட்டுப்பாட்டில் அந்நாட்டு அதிபர்.! மக்கள் போராட்டம்..

Published by
மணிகண்டன்

அதிபர் கைது செய்யப்பட்டு நைஜரில் ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. இதனை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜரில் அதிபர் முகமது பாகம் தலைமையில் ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த ஆட்சியின் கீழ் செயல்பட்டு வந்த ராணுவம் திடீரென அரசாங்கத்திற்கு எதிராக திரும்பி அதிபர் முகமது பாகமை சிறை பிடித்து காவல்துறை கட்டுப்பாட்டில் வைத்தனர்.

அதிபர் கைதை அடுத்து, அந்நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள், அதிபர் பதவியில் இருந்து முகமது பாகம் அகற்றப்பட்டு உள்ளார். எனவே தற்போது நைஜரில் ராணுவ ஆட்சி நடைபெறுகிறது என அறிவித்தனர். இது உள்நாட்டு விவகாரம் எனவும் யாரும் தலையிட வேண்டாம் என்றும் ராணுவ அதிகாரிகள் கூறினார்.

ராணுவ ஆட்சி நடைபெறுவதால், பிற நாட்டு போக்குவரத்தை தவிர்க்க, அங்கு அந்நாட்டு தரைவழி எல்லைகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. மேலும், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ராணுவத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து அந்நாட்டு மக்கள் கடுமையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி கலக்க  முற்பட்டு வருகிறது. இதனால் நைஜர் நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

நைஜர் நாட்டு ராணுவத்தின் இந்த செயலுக்கு ஐநா கடும் கண்டனத்தை பதிவு செய்து உள்ளது. ஜனநாயகத்திற்கு எதிராக நைஜர் ராணுவத்தினர் செயல்பட்டு வருகின்றனர் எனவும், அதனை நிறுத்த வேண்டும் என்றும், அதிபர் முகமது பாகமை விடுதலை செய்ய வேண்டும் எனவும் ஐநா தனது கண்டனத்தில் குறிப்பிட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

13 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

13 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

13 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

14 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

15 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

17 hours ago