indonesia train accident [file image]
இந்தோனேசியாவில் இருக்கும் முக்கிய தீவுகளில் ஒன்றான ஜாவா தீவில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். குறைந்தது 28 பேர் காயமடைந்தனர் என்று அங்கிருந்த அதிகாரிகள் தகவல்கள் தெரிவித்தனர்.
மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிகாலெங்காவில் உள்ள நெல் வயல்களுக்கு அருகில் உள்ளூர் நேரப்படி காலை 6:03 மணிக்கு விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. கிழக்கு ஜாவா மாகாணத்தின் தலைநகரான சுரபயாவிலிருந்து பாண்டுங் நோக்கிப் பயணித்த துரங்கா விரைவு ரயில், சிகலெங்கா நிலையத்திலிருந்து படலராங் நோக்கிச் சென்ற பயணிகள் ரயிலில் மோதி விபத்து ஏற்பட்டது.
ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவர் ட்ரோன் தாக்குதலில் மரணம்!
இந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 28 பேர் காயமடைந்தனர் காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த விபத்து சம்பவத்தால் ரயில் தண்டவாளத்தில் இருந்து பல பெட்டிகள் தடம் புரண்டது.
இது குறித்து மீட்பு நிறுவனத்தின் தலைவர் ஹெரி மராந்திகா பேசியதாவது ” மேற்கு ஜாவாவின் பாண்டுங் நகரத்தில் உள்ள சிகாலெங்கா ரயில் நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர் (கெஜம்) தொலைவில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் ரயிலில் பயணம் செய்த 106 பேரும், துரங்காவில் பயணம் செய்த 54 பேரும் மீட்கப்பட்டார்கள். இன்னும் மீட்பு பணி நடந்து வருகிறது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…