Categories: உலகம்

பிரிட்டன் தேர்தல் : ரிஷி சுனக் கட்சி பெரும் தோல்வி.! மாபெரும் வெற்றிபெற்ற தொழிலாளர் கட்சி.!

Published by
மணிகண்டன்

UK தேர்தல்: ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 81 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. தொழிலாளர் கட்சி 360 இடங்களை வென்றுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் நேற்று (வியாழன்) 650 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிரதமருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக தற்போதைய பிரதமர் ரிஷி சுனக்கும், தொழிலாளர் கட்சி  சார்பாக கீர் ஸ்டார்மரும் பிரதான பிரதமர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

நேற்று உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு ஆரம்பித்த தேர்தல் இரவு 10 மணிக்கு நிறைவடைந்தது. இதனை அடுத்து இன்று (வெள்ளி) உள்ளூர் நேரப்படி அதிகாலை முதலே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 650 இடங்கள் கொண்ட பிரிட்டன் தொகுதிகளில் பெரும்பான்மை நிரூபிக்க ஒரு கட்சிக்கு 326 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

இதுவரை வெளியான வாக்கு எண்ணிக்கை நிலவரம் அடிப்படையில் ஆரம்பம் முதலே தொழிலாளர் கட்சி முன்னிலை பெற்று வருகிறது. சுமார் 14 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்து வந்த கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி காலம் நிறைவு பெரும் தருவாயில் உள்ளது.

தற்போது வரையில் 360 இடங்களில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 81 இடங்களை மட்டுமே வென்றுள்ளது.  மற்ற கட்சிகளான ஸ்காட்டிஷ் தேசியவாத கட்சி (SNP) 3 இடங்களிலும்,  Liberal Democrats 49 இடங்களிலும், சீர்திருத்த UK கட்சியினர் 3 இடங்களிலும் தங்கள் வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

அந்நாட்டு ஊடகங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின்படி, சுமார் 410 இடங்களை வென்று தொழிலாளர் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்றும், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 131 இடங்களில் மட்டுமே வெற்றியை பதிவு செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

2 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

2 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

3 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

3 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

6 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

6 hours ago