COP28 summit in Dubai. (AFP)
உலக முழுவதும் காலநிலை மாற்றம் என்பது ஒரு பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. பருவம் தவறிய மழை, வெள்ளம் புயல் உள்ளிட்டவற்றால் பல நாடுகள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த பிரச்சனைகள் அனைத்தும் பூமி வெப்பமடைவதால் நடக்கிறது என கூறப்படுகிறது. இதனால், அதனை தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பூமி வெப்பமயமாதல், காலநிலை மாற்ற உள்ளிட்ட பிரச்சனைகளை சரிசெய்ய உலக நாடுகளின் தலைவர்கள் பலர் தொடர்ந்து திட்டங்களை தீட்டி வருகின்றனர். இந்த நிலையில், உலக காலநிலை மாற்ற உச்சி மாநாடு (COP-28) இன்று துபாயில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளனர்.
2 நாட்கள் பயணமாக துபாய் சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு..!
இன்று துபாயில் தொடங்கும் காலநிலை உச்சி மாநாட்டில், துபாயில் பல்வேறு உலக தலைவர்கள், 130க்கும் மேற்பட்ட மாநில தலைவர்கள் மற்றும் அரசுகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கலந்து கொள்கின்றனர். சர்வதேசத் தலைவர்கள் பலரும் வருகை தந்துள்ள நிலையில், துபாயில் தொடங்கியுள்ள ஐ.நா.வின் COP28 மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெறும் சர்வதேச காலநிலை நடவடிக்கை உச்சி மாநாடு அதிக கவனம் பெற்றுள்ளது.
COP28 உச்சி மாநாடானது டிசம்பர் 12 வரை துபாயில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை ஐக்கிய அரபு அமீரகம் ஏற்று நடத்துகிறது. இதில், காலநிலை மாற்றத்தைத் தடுப்பதில் கூட்டு முயற்சியை வலியுறுத்தப்படும். கரியமிலவாயு உமிழ்தலைக் கட்டுப்படுத்துவதில் உள்ள நிதிச் சிக்கல் பற்றியும், வறுமையில் உள்ள நாடுகளுக்கு காலநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளித்தல் பற்றியும் விவாதிக்கப்படும்.
இந்த நிலையில், காலநிலை மாற்ற உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் துபாய் புறப்பட்டு சென்றார். துபாய் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், இந்த மாநாட்டில் சிறப்புரையாற்றும் பிரதமர் மோடி, முதல் இரண்டு நாட்களில் துபாயில் இருக்கிறார். அங்கு அவர் உலகளாவிய தலைவர்கள் மற்றும் வணிக சமூகத்தின் உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…