ஆளுநருக்கு கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 100 பேர் கைது..!

100 people who tried to participate in the protest to show the black flag to the governor were arrested..!

Arrest

ஆளுநருக்கு கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 100 பேர் கைது செய்த போலீசார்.

இன்று கடலூர் வழியாக செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக்கொடி காட்ட அரசியல் கட்சிகள் முடிவு செய்திருந்தனர். அதன்படி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இதனையடுத்து, கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற அரசியல்  கட்சிகளை சேர்ந்த நூறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.