vijayakanth [Imagesource : The Economic times]
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது போல், சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு விஷேச நாட்களில் பக்தர்கள் சிரமமின்றி செல்ல போதிய பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள பிரசித்தி பெற்ற காரையார் சொரி முத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசையை ஒட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு திரண்டுள்ள நிலையில், பேருந்து வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தராத மாவட்ட நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது போல், சொரி முத்து அய்யனார் கோயிலுக்கு விஷேச நாட்களில் பக்தர்கள் சிரமமின்றி செல்ல போதிய பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மலைப்பகுதியில் கோவில் உள்ளதால் பக்தர்கள் தங்களது
நேர்த்திக்கடனை சிறப்பாக செய்ய காவல்துறை உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
மதுரை : மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…