இனிமேல் நான் மிகவும் ஆபத்தானவனாக தான் இருப்பேன் – பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அதிரடி..!

Published by
லீனா

நான் அரசாங்கத்தில் ஒரு பகுதியாக இருந்தபோது நான் ஆபத்தானவனாக இல்லை, ஆனால் இப்போது நான் மிகவும் ஆபத்தானவனாக இருப்பேன் என்று இம்ரான் கான் பேச்சு. 

பாகிஸ்தான் பிரதமர்  பதவியில் இருந்து விலகிய பின் இம்ரான் முதல்முறையாக பெஷாவரில் புதன்கிழமை நடைபெற்ற பேரணியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நான் நீதித்துறையிடம் கேட்கிறேன், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும் முன்பாக நள்ளிரவில் நீதிமன்றம் திறக்கப்பட்டது ஏன்?  45 ஆண்டுகளாக இந்த தேசம் என்னை அறிந்திருக்கிறது.

நான் எப்போதாவது சட்டத்தை மீறியிருக்கிறேனா? நான் கிரிக்கெட் விளையாடியபோது, ​​யாரேனும் என்னை மேட்ச் பிக்சிங் செய்ததாக குற்றம் சாட்டியதுண்டா? என கேள்வி எழுப்பியுள்ளார்.  மேலும், ஒவ்வொரு முறையும் ஒரு பிரதமர் வெளியேற்றப்பட்டால், மக்கள் அதைக் கொண்டாடுவார்கள், ஆனால்  பதவியில் இருந்து நீக்கப்பட்டபோது, ​​​​திரளான மக்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

பாகிஸ்தானில் உள்ள பிடிஐ அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்க்கட்சிகளின் உதவியுடன் வாஷிங்டனில் “வெளிநாட்டு சதி” திட்டமிடப்பட்டது என்று அவர் மீண்டும் வலியுறுத்தி உள்ளார். நான் அரசாங்கத்தில் ஒரு பகுதியாக இருந்தபோது நான் ஆபத்தானவனாக இல்லை, ஆனால் இப்போது நான் மிகவும் ஆபத்தானவனாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட அரசாங்கத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம், இந்த நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தி மக்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்  என்றும், ஷேபாஸ் ஷெரீப் மீது 40,000 கோடி ரூபாய் ஊழல் வழக்குகள் இருப்பதால், அவரைப் பிரதமராக பாகிஸ்தான் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Recent Posts

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது வரலாற்றுப் புரட்சி – ஓ.பன்னீர்செல்வம்!

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது வரலாற்றுப் புரட்சி – ஓ.பன்னீர்செல்வம்!

சென்னை : முன்னாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு, ஜெயலலிதாவின் 1998-ல் பாஜக ஆட்சியைக் கவிழ்க்க எடுத்த முடிவு “வரலாற்றுப்…

6 minutes ago

வேடன் மீது பாலியல் வன்கொடுமை புகார்! வழக்குப்பதிவு செய்த போலீசார்!

கொச்சி : கேரளாவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் வேடன் (எ) ஹிரந்தாஸ் முரளி மீது, இளம்பெண் மருத்துவர் ஒருவர்…

43 minutes ago

INDvsENG : தொடரை சமன் செய்யுமா இந்தியா..இன்று 5-வது டெஸ்ட் போட்டி!

லண்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 31,…

2 hours ago

ஆக 2 முதல் 5 வரை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ஆம்…

2 hours ago

நடப்பு நிதியாண்டில் 9 ராக்கெட்கள் ஏவ திட்டம்- இஸ்ரோ தலைவர் நாராயணன் முக்கிய தகவல்!

சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவர் வி. நாராயணன், நடப்பு நிதியாண்டில் (2025-26) 9 முக்கிய…

2 hours ago

இந்தியாவுக்கு கூடுதலாக அபராதம் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் இந்தியாவுக்கு எதிரான புதிய வரி மற்றும்…

2 hours ago